ஐயா பேசினார்...
கூட்டம் சிலித்தது.
ஐயா முழக்கமிட்டார்...
கூட்டம்  ஆர்ப்பரித்தது. 
ஐயா இருமினார்...
கூட்டம் பதைபதைத்தது.
...
ஐயா ரிடையர் ஆனார்...
கூட்டம் மறந்து போனது.
செ. அருள்செல்வம். 
பாட்டன்
குழி வெட்டி,
நீர்  பாய்ச்சி,
வியர்வை சிந்திய மரத்தருகில்
பேரனால்
செய்ய முடிந்தது,
வியர்வை வெளியேற
ஜாக்கிங்  மட்டும்தான்.
சி. ஸ்ரீதேவி 
மகளிரணி

வளைந்தும்
நிமிர்ந்தும் வாழுமாம்.

வளைந்த பின்
நிமிர்ந்தென்ன?

வாழ்ந்தென்ன?

-செ. அருள்செல்வம்.  

Read more...

  © என் பக்கம் செ. அருள்செல்வம் - www.arulselva.blogspot.com 2009

>>

Back to TOP